பிரபல இயக்குநராக திகழ்ந்த தியாகராஜன் சாலையோரம் இறந்து கிடந்த விஷயம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டையை சேர்ந்த இயக்குனர் எம். தியாகராஜன் சினிமா இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் டி.எஃப்.டி படித்து சினிமா இயக்குனரானார்.
நடிகர் பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த மாநகர காவல் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் M.தியாகராஜன். இவர் ஏவிஎம் ஸ்டூடியோ அருகே இன்று காலை இறந்து கிடந்துள்ளார்.
இந்நிலையில் ஏ.வி.எம் ஸ்டுடியோ எதிரில் தெருவோரமாக அனாதையாக இறந்து கிடந்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.